இந்நிலையில், திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி புதன்கிழமை வந்தார். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக்கோரி கருப்புக்கொடியுடன் ரயில்வேயின் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவரை முற்றுகையிட்டனர். ஏ.ஐ.எஸ்.சி. எஸ்.டி. தொழிற்சங்க கிளைத் தலைவர் பி.செல்லையா, டி.ஆர்.இ.யூ. கிளைத் தலைவர் ராஜு, ஏ.ஐ.எல்.ஆர். எஸ்.ஏ. மண்டல நிர்வாகி நாராயணன், எஸ்.ஆர்.ஏ.யூ. தொழிற்சங்க நிர்வாகி மணி, ஏ.எல்.ஓ.பி.சி. தொழிற்சங்க நிர்வாகி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத்தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.