நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் அரைமணி நேரம் பெய்த மழையால் கடும் சேதம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் அரைமணி நேரம் மழைபெய்தது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர்.  அரைமணி நேர மழையில் பழனியில் சண்முகபுரம்,

News image
Updated On :29 ஜூன் 2014, 2:50 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சேதமேற்பட்டது.

பழனியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் அரைமணி நேரம் மழைபெய்தது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர்.  அரைமணி நேர மழையில் பழனியில் சண்முகபுரம், லட்சுமிபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதியில் ஏராளமான மரங்கள், கிளைகள் ஒடிந்து விழுந்தது.  லையன்ஸ்கிளப் ரோட்டில் மின்கம்பம், மரம் சாய்ந்து விழுந்ததில் டெம்போ, இருசக்கரவாகனங்கள் சேதமடைந்தது.  நகராட்சி பேருந்து நிலையத்தில் நகராட்சி உணவு விடுதியின் மேல்மாடியில் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  நகரில் பல்வேறு இடங்களிலும் கடை போர்டுகள், பதாகைகள் சாய்ந்தது. 

சேதத்தைத் தொடர்ந்து மின்வாரிய உதவி செயற்பொறியளர் ராஜேந்திரன் தலைமையில் உதவிப் பொறியாளர்கள், உதவியாளர்கள் குழுவினர் சேதங்களை சீரமைத்து மின்சார வினியோகத்தை சீர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.