கடிததத்தில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வக்குமார் கடலூர் மாவட்ட ஆயதப்படைக்காவலராக உள்ளார். இவர் கடந்த 11-2-2014 அன்று காலை தலையில் பலத்த காயத்துடன், காது அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை மற்றும் உடலில் உள்ள காயங்கள் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் கருதுகின்றனர். ஆனால் காவல்துறை சந்தேக மரணம் (174 (4)) என வழக்குப் பதிவு செய்துள்ளது. பல தரப்பு மக்களும் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.