தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஒன்பது பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகள் தயாரிப்பதாக,குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது

Updated On :4 மார்ச் 2014, 10:47 am

சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஒன்பது பேர் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகள் தயாரிப்பதாக,குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பாண்டி கொடுத்த தகவலின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் சிறுகுளம் கண்மாய் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

சோதனையில் அதேபகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் பேன்சிரக பட்டாசுகள் அனுமதியின்றி தயாரிக்கபட்டது தெரியவந்தது.இதையடுத்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் படந்தால் சேர்ந்த ஜான்சன்,கே.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி,பாலு உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜான்சனை மட்டும் கைது செய்துள்ளனர்.மேலும் பேன்சிரக பட்டாசுகள்,பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளதாகவும்,அதன் மதிப்பு இரண்டு லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.