சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஒன்பது பேர் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகள் தயாரிப்பதாக,குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பாண்டி கொடுத்த தகவலின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் சிறுகுளம் கண்மாய் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அதேபகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் பேன்சிரக பட்டாசுகள் அனுமதியின்றி தயாரிக்கபட்டது தெரியவந்தது.இதையடுத்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் படந்தால் சேர்ந்த ஜான்சன்,கே.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி,பாலு உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜான்சனை மட்டும் கைது செய்துள்ளனர்.மேலும் பேன்சிரக பட்டாசுகள்,பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளதாகவும்,அதன் மதிப்பு இரண்டு லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

