தூத்துக்குடியில் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் 37 வது வார்டு கவுன்சிலரும் அதிமுக மேற்கு மண்டலத் தலைவருமான வெள்ளப்பாண்டி (வயது 55) இன்று மதியம் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.









