/

கலசலிங்கம் பல்கலை.யில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.இ.இ., இ&ஐ, பயோ டெக்னாலஜி ஆகிய மூன்று துறைகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:41 am

ஜெயகுமார்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.இ.இ., இ&ஐ, பயோ டெக்னாலஜி ஆகிய மூன்று துறைகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் பொதுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள வசதி வாய்ப்புகள், வளாக நேர்காணல்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கினர்.துறைத் தலைவர்கள் பள்ளிகொண்ட ராஜசேகரன், சுந்தர், கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் உயர்தர கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.

மேலும் பெற்றோர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.