அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் ஊழியர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேரூராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேரூராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.
வ.புதுப்பட்டி, பிரசிடென்ட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ் மனைவி கார்த்திகேயனி (42). இவரது கணவர் அரசுப் பணியில் இருந்த போது இறந்துவிட்டார். எனவே இவரது மனைவி கார்த்திகேயனிக்கு கருணை அடிப்படையில் வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கிளார்க் வேலை வழங்கப்பட்டு, இப் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை கிருஷ்ணன்கோவில் கண் மருத்துவமனைக்கு போவதற்காக கார்த்திகேயனி தனது ஊரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்து இறங்கியுள்ளார். எதிர் திசையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார்த்திகேயனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...