ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மக்கள் கல்வி நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொழிற் பயிற்சிகள்

விருதுநகர் மாவட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படிக்காத மற்றும் படிப்பைத் தொடர இயலாத மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற் பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

News image
Updated On :4 மே 2014, 2:20 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படிக்காத மற்றும் படிப்பைத் தொடர இயலாத மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற் பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வயது வந்தோர் கல்வித் துறை சார்பில், சத்குரு மாதா அமிர்தானந்த மயி தேவி மடம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனத்தில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவுள்ளது.இதில் பெண்களுக்கு நர்ஸிங் அசிஸ்டண்ட் (உதவி செவிலியர்), தையல்கலை, அழகுகலை, மென் பொம்மைகள் தயாரித்தல், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், ஆரி மற்றும் சர்தோஷி வேலைப்பாடுகள், சேலையில் பிரிண்டிங் செய்தல், உல்லன் வேலைப்பாடுகள், மெஷின் மற்றும் கை எம்பிராய்டரி, சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளும், ஆண்களுக்கு எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், பிளம்பிங் இன்வெர்ட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படவுள்ள இத் தொழிற்பயிற்சிகள் அனைத்தும் பயனாளிகள் சார்ந்துள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பகுதி நேரமாக தினமும் 2 மணி நேரம் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட படித்த மற்றும் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் இயக்குநர், மக்கள் கல்வி நிறுவனம், 4/92-A, அழகுதேவன்குளம் ரோடு, ஆவாரம்பட்டி, ராஜபாளையம் என்ற முகவரிக்கு இம் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக நேரத்தில் 04563-232213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.