ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :8 மே 2014, 12:34 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.மானகசேகரி, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பி.சூரியநாராயணன் (43). இவரது மகன் சிவசக்கரவர்த்தி (12). இவர் டி.மானகசேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மதியம் மேலும் ஒரு பையனுடன், டி.மானகசேரிக்கு கிழக்கேயுள்ள முத்துக்காளைத் தேவர் என்பவருக்குச் சொந்தமான கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கால் தவறி சிவசக்கரவர்த்தி கிணற்றில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் சூரியநாராயணன் கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.