ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுதாக மிரட்டல்: டாக்டர் மீது வழக்கு

கொடுத்த பணத்தைக் கேட்ட பொறியாளரை, விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,

News image
Updated On :11 மே 2014, 12:56 pm

கோ.ஜெயக்குமார்

கொடுத்த பணத்தைக் கேட்ட பொறியாளரை, விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, திருமலாபுரம்-இந்திராநகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் மகேஸ்வரன் (36). திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகா, வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் டாக்டர் சிவசுப்பிரமணியம். இவர் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர். இருவரும் உறவினர்கள். இந்நிலையில் டாக்டர் சிவசுப்பிரமணியம், மகேஸ்வரனிடம் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35 லட்சம் பெற்றாராம். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.

இந்நிலையில் டாக்டர் சிவசுப்பிரமணியம், வியாழக்கிழமை மதுரையில் இருப்பதாகக் தகவல் கிடைத்து மகேஸ்வரன் அங்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தைத் தராமல், மிரட்டி அனுப்பிவிட்டாராம். இது குறித்து மகேஸ்வரன் அவணியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடியில் உள்ள இ.கே.எஸ். மருந்துக் கடையில் உள்ள சிறப்பு மருத்துவ ஆலோசனை மையத்தில் டாக்டர் சிவசுப்பிரமணியம் இருந்துள்ளார். அங்கு டாக்டர் இருப்பதை அறிந்து வந்த மகேஸ்வரன், பணத்தைக் கேட்டுள்ளார். டாக்டர் சிவசுப்பிரமணியம், மகேஸ்வரனை ஆபாசமாகப் பேசி அடித்து கீழே தள்ளிவிட்டாராம். மேலும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மகேஸ்வரன் புகார் செய்தார். காவல் சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ், டாக்டர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.