கடலூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 2 லட்சத்து 2 ஆயிரத்து 659 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார்.
25-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 3387, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)120, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)11, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)1760 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 67, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)924, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 7.
சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 4, ச.ஆனந்தராஜன் 12, எஸ்.கிரிஜா 1, தி.சிவஞானசம்பந்தன் 9, ரா.செங்குட்டுவன் 2, திருநாவுக்கரசு 15, பாஸ்கர் 7, ராதாகிருஷ்ணன் 10, ராஜ்குமார் 69, ஜெயசங்கர் 58, நோட்டா 101.
24வது சுற்றில் 13365 வாக்குகள் எண்ணப்பட்டது. 24 சுற்றுகளிலும் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 644 வாக்குகள் எண்ணப்பட்டது. 25-வது சுற்று(இறுதி சுற்று) இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனைக் காட்டிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 659 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.