அதிமுக அமோக வெற்றி பெற்றதால் சிதம்பரம் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் 108 குட பால்அபிஷேகம் செய்தும், 108 தேங்காய் உடைத்தும் அதிமுகவினர் நேர்த்தி கடன் செலுத்தினர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், தமிழகத்தில் 37 இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து சிதம்பரம் கீழவீதியில் உள்ள ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் தொகுதி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.எஸ்.அருள் தலைமையில் வீரசக்தி ஆஞ்சநேயருக்கு 108 பால் குட அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் 108 தேங்காய் உடைத்து தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள் நேர்த்திகடன் செலுத்தினார். பின்னர் வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கி அதிமுகவினர் வெற்றியை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நிர்வாகிகள் சிவசிங்காரவேல், மணிவேல், பாலதண்டாயுதம், ராஜா, ராஜவேல், ரமேஷ், இளங்கோ, தனகோவிந்தராஜன், பழனிவேல், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

