ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராஜபட்ச வருகை: ஸ்ரீவிலி. அருகே வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்

நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள்

News image
Updated On :25 மே 2014, 8:48 am

கோ.ஜெயக்குமார்

நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஞாயிற்றுக்கிழமை தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபட்சவின் அரசு போர்க் குற்றங்களை நிகழ்த்தியது. மேலும், இலங்கை அரசின் இனப் படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியன குறித்து தமிழக சட்டப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து பெரும்பான்மையான கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டு, புதுதில்லிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மல்லி ஊராட்சி, அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதியதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் எனவும் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்பே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்பாக்கியமான செயல் தமிழக மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. ராஜபட்ச வருகையை எதிர்த்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம். அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை எங்கள் வீடுகளில் கருப்புக் கொடி பறக்கும் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.