தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அ.கனியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் யோகா பயிற்சியாளர் ஜே.காளீஸ்வரி, இண்டர் நேஷனல் கராத்தே அகாடமி ஆப் இந்தியாவின் அகில இந்திய தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் ஆகியோர் தலைமையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.நிகழ்ச்சியில் திருமூர்த்திமலை, உலக சமாதான அறக்கட்டளை சார்பில் கே.என்.சேதுராமன், ஆர்.தவமணி, பி.சின்னத்தம்பி, அருட்செல்வம், திருப்பதிராஜா மற்றும் கிராம மக்கள், பள்ளி கிராம கல்விக் குழுவினர், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.