டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விபத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.15.31 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ரூ.15,31,986 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

News image
Updated On :1 நவம்பர் 2014, 2:20 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ரூ.15,31,986 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

ராஜபாளையம், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அனுஷியா கனகமுனி (35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அனுஷியா கனகமுனி, ராஜபாளையத்தில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 6.9.10-ம் தேதி தனது உறவினர் குமாரவேல் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் அனுஷியா சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் அனுஷியாவின் கை, கால் நசுங்கி பாதிக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், மதுரையில் உள்ள பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுஷியா கனகமுனிக்கு ரூ.15,31,986 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.