பின்னர் நவ.4-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.30 ணணிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.பின்னர் தெய்வீக கருத்தரங்கம் சற்குரு சித்தர் சுவாமிகள் தலைமையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமிராசு முன்னிலையில் நடைபெறுகிறது. சுவாமி ஓங்காரநந்தா வரவேற்கிறார். கருத்தரங்கில் உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் திருமடம் ஸ்ரீசிவஞான தேசிக சுவாமிகள், சிதம்பரம் மெளன மடாலயம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள், கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள், தருமை ஆதீனம் முனைவர் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று ஆசியுரை வழங்குகின்றனர்.