சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பச்சையப்பன் அறக்கட்டளை மூலம் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் ஸ்ரீநடராஜர் தேர் முற்றிலுமாக புணரமைக்கும் பணியை பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினரும், நிதிக்குழுத் தலைவருமான பிரதாப்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, தேர் புணரமைத்து வரும் திருவாரூரைச் சேர்ந்த சிவனேசன் ஸ்தபதியிடன் பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார். அவருடன் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கரதீட்சிதர், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பச்சையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் சி.என்.சிங்காரவேலு, நகரமன்ற உறுப்பினர் வி.செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.