திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பானாங்குளம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட வெட்டியது. இந்த சம்பவத்தில் வேலுச்சாமி என்பவர் நள்ளிரவு உயிரிழந்தார்.

இந்த கும்பலால் தாக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த மாரி என்கிற மாரிக்கனி என்பவரது தலையில்லாத சடலம் இன்று காலை 7 மணிக்கு மீட்கப்பட்டது. படுகாயம் அடைந்த கணேசன் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை கும்பலிடம் இருந்து ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார். அவரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி மூன்றடைப்பு பிரதான சாலையில் பானாங்குளம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றாவளிகளை பிடித்து கைது செய்யவும், கிராமத்தில் தொடரந்து இதுபோன்ற கோஷ்டி மோதல்கள் நடைபெறாமல் தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com