அழகாபுரம் வன்னியர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (40). இவர்களது மகள்கள் ஸ்ரீஹரிணி (22), தேஜாஸ்ரீ (13). பி.இ. பட்டதாரியான ஸ்ரீஹரிணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தேஜாஸ்ரீ அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீஹரிணிக்கு உடல் நலக்குறைவு என்பதால் அவரைப் பார்ப்பதற்காக கஸ்தூரி சென்னை சென்றுள்ளார். வியாழக்கிழமை துரைராஜ் வழக்கம் போல் பணிக்கும், தேஜாஸ்ரீ பள்ளிக்கும் சென்றிருந்தனர். பணி முடிந்து இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய துரைராஜ், வீட்டில் தனது மகள் தேஜாஸ்ரீ கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தலைமையில் துணை ஆணையர்கள் பாபு, பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். விசாரணையில் மாணவியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பதும், அவர் நீண்ட நேரம் போராடியதால் வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பதும் தெரிய வந்தது.
மேலும் வீட்டில் இருந்த ரூ.3 ஆயிரம், ஒரு செல்பேசி ஆகியவையும் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் தேஜாஸ்ரீக்கு நன்கு தெரிந்த இளைஞர்கள் இருவர் அவர் பள்ளியில் இருந்து திரும்பியதும் வீட்டுக்கு வந்திருப்பதும், அவர்களிடம் தேஜாஸ்ரீ உரையாடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் யார், மாணவி தேஜாஸ்ரீயை எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவி கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

