கடையநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ரூ. 2.67 லட்சத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணாபுரம், கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகுமுத்து மகன் கருப்பசாமி(44). இவர் கிருஷ்ணாபுரத்தில் இருசக்கர வாகன விற்பனையகம் நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தாராம். பின்னர் பணப்பையை வீட்டிலுள்ள மேஜை மீது வைத்து விட்டு கதவைப் பூட்டாமலேயே தூங்கி விட்டாராம். நள்ளிரவு கண் விழித்துப் பார்த்த பொழுது பணப்பையைக் காணவில்லையாம். அதில் ரூ. 2,67,000 பணம் இருந்ததாம். இது தொடர்பான புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.