டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் தொடர் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

News image
Updated On :19 நவம்பர் 2014, 9:00 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

கோரிக்கைகள்:

விருதுநகர் மாவட்ட அளவிலான மகளிர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்க அரசாணை வெளியிட்டு 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மகளிர் நீதிமன்றம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனை உடனே அமைக்க வேண்டும்.

5 மாதங்களாக காலியாக உள்ள விரைவு நீதித்துறை நடுவர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்ட மறுநாளில் இருந்து, சுமார் 3 மாதங்களாக இந்த நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. உடனே இப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விருதுநகருக்கு மாற்றப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக இதனை உடனே முன்புபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.