கர்நாடகத்தில் இருஅணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை 12 மணிக்கு ரயில் மறியலில் ஈடுபட காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தலைமையில் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி, பாசிமுத்தான்ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், ராதா மதகு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாயகி, குமராட்சி சி.பழனிராஜா உள்ளிட்டோர் வந்தனர். அப்போது பாதுகாப்பிற்காக வந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்போவதாக தெரிவித்தனர்.