அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

ஜெயம் கொண்டம் அருகே தந்தையை கழுத்து அறுத்து கொலை செய்த மகன் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்ட அருகே சொத்து தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்ட அருகே உள்ள தத்தனூர் கீழ வெளியை சேர்ந்த  பிச்சைப்பிள்ளை மகன் சந்தோசம் (85) இவருக்கு 4 மகன்கள்.

Updated On :23 நவம்பர் 2014, 1:38 pm IST

அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்ட அருகே சொத்து தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்ட அருகே உள்ள தத்தனூர் கீழ வெளியை சேர்ந்த  பிச்சைப்பிள்ளை மகன் சந்தோசம் (85) இவருக்கு 4 மகன்கள்.

இவர்களில் தந்தையுடன் செல்வம் என்ற மகன் தங்கி இருந்தார். தந்தை தனது சொத்தை 4 மகன்கள் உட்பட தனக்கும் சேர்த்து 5 பாகமாக பிரித்திருந்தார். இந்நிலையில் தனது பாகத்தை விற்க முறபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜங்கம் என்பவர் தந்தையிடம் வந்து சண்டையிட்டதோடும் தம்பி செல்வத்தை ஆத்திரத்தில் வெட்டியுள்ளார். வெட்டுபட்ட செல்வம் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வீட்டில் இருந்த தந்தையையும் வெட்டினர். இதில் தந்தை சந்தோசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உடையார் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.