வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லையில் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் பங்கேற்பு

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் அதிமுகவின் இளைஞர் பாசறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் பங்கேற்றனர்.

News image
Updated On :7 அக்டோபர் 2014, 8:37 am

ஷேக் அப்துல்காதர்

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் அதிமுகவின் இளைஞர் பாசறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் பங்கேற்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து பல்வேறுப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் மு.ஹரி ஹரசிவங்கர் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் என்ற கார்த்திக், துணைத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், வினிதா, பொருளாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எம்.பி. க்கள் வசந்தி முருகேசன், கே.ஆர்.பி. பிரபாகரன், எம்.எல்.ஏ. க்கள் நயினார் நாகேந்திரன், முத்துசெல்வி, துணை மேயர் பூ. ஜெகநாதன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.