டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.35 லட்சம் தப்பியது: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. பணத்தை எடுக்க முடியாததால் அதிலிருந்த ரூ.35 லட்சம் தப்பியது. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :11 அக்டோபர் 2014, 5:22 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. பணத்தை எடுக்க முடியாததால் அதிலிருந்த ரூ.35 லட்சம் தப்பியது. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு, முத்தாலம்மன் பஜாரிலிருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் ஆகியோர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஏ.டி.எம். மையம் திறந்து கிடந்துள்ளது. அதனுள் சென்று போலீஸார் பார்த்த போது இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து உஷாரான போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். அதிகாலை நேரத்தில் ஏற்கெனவே சில திருட்டு வழக்குகளில் தொடர்பு உடைய ஒரு நபர் அவ்வழியே சுற்றித் திருந்துள்ளார். அவரை போலீஸார் பிடித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுத்துள்ளார். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை போலீஸார் ஆய்வு செய்து பார்த்தபோது, போலீஸார் பிடிந்து வந்த நபர் தனது தொழிலுக்குப் பயன்படுத்தும் உளியைக் கொண்டு மிஷினை உடைத்ததும், உடைக்க முடியாமல் உளி உடைந்ததும்

இதனையடுத்து ராஜ் ஆசாரி ஏ.டி.எம். மையத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது. உளி உடைந்ததால், ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்த ரூ.35 லட்சம் பணம் தப்பியது.இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜ் ஆசாரியைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.