அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் எம்.எல்.ஏ., மலரவன் தலைமையில் கூடிய அதிமுகவினர்., 20க்கும் மேற்பட்டோர், தாங்கள் அணிந்திருந்த கறுப்புச் சட்டையைக் கழற்றி சாலையில் போட்டு தீவைத்துக் கொளுத்தினர். பின்னர் வெள்ளைச் சட்டையை அங்கேயே அணிந்து கொண்டு, இன்றுதான் தங்களுக்கு தீபாவளி என்று கூறியபடியே கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.