அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, விருதுநகரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய தகவலை அறிந்து கொண்ட அதிமுகவினர் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட அவைத் தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினருமான ஐ.மருது தலைமையில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி உள்ளிட்ட அதிமுகவினர் திரண்டனர். பின்னர் அங்கு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
அதையடுத்து, பழைய பேருந்து நிலையம், பஜார், தெப்பக்குளம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சாத்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் சங்கரலிங்கம், அதிமுக நகரச் செயலாளர் நயினார் முகமது, நகராட்சி துணைத் தலைவர் எஸ்.மாரியப்பன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் மூக்கையா, நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

