விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் படேல் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (55). இவர் தனது மனைவியுடன், பெங்களூருவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 4 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவரது மகனும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், பெங்களூருவிலிருந்து வியாழக்கிழமை இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த எல்.சி.டி டிவி ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

