அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அருப்புக்கோட்டையில் முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர் கூட்டம்

முன்னாள் படை வீரர் நல உதவி அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On :18 அக்டோபர் 2014, 5:51 am

முன்னாள் படை வீரர் நல உதவி அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி வட்டார பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் பயனடையும் வகையில் நடத்தப்படுகிறது.

இதில், அசல் படை விலகல் சான்று, அடையள அட்டை மற்றும் பல்வேறு ஆவணங்களுடன் உதவி இயக்குநரை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்கலாம். அதோடு, புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட உள்ளனர். எனவே இந்த முகாமில் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.