மேலும் தனக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். ஆனால் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், தடையில்லாச் சான்றிதழ் வழங்க பணம் ரூ.1000 தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனைத் தர மனதில்லாத முத்துப்பிரகாஷ், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழில் தடுப்பு போலீஸில் புகார் செய்தார். காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், மதியழகன் ஆகியோரின் ஆலோசனையில் பேரில், ரசயானம் தடவிய பணம் ரூ.1000-யை, சுரேஷ்குமாரின் உதவியாளர் பாலகுமார் அலுவலகத்தில் பெறும்போது மறைந்திருந்த போலீஸார் அவரைப் பிடித்தனர். மேலும் இந்தப் பணம் சுரேஷ்குமாருக்கு வழங்குவதற்காக பெறப்பட்டது என்று அவர் கூறியதையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்தனர்.