சென்னையில் இருந்து வந்த விமானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினர். அங்கு அவர்கள் மூவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின், இது ஒரு அரசியல் நாகரீகத்துக்கு சாட்சியாக அமைந்த சந்திப்பு என்று கூறிவிட்டு சென்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த சந்திப்பு அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.