மழை வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை ககன்தீப்சிங் பேடி ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை தமிழகஅரசு வருவாய்த்துறை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.









