புவனேஷ்வரி, கொத்தன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் புவனேஷ்வரி படித்துக் கொண்டிருக்கும் போது, பிச்சைமாரி மகளுக்கு சொல்லிக் கொடுப்பதுபோல அருகில் உட்கார்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மகள், தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து 26.5.14-ம் தேதி பிச்சைமாரியை ராமலட்சுமி கண்டித்துள்ளார். இதனையடுத்து வீட்டைவிட்டு ராமலட்சுமியை வெளியேறும்படி பிச்சைமாரி கூறியுள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி தனது இரு மகள்களுடன் ராஜபாளையத்தில் உள்ள தாய் வீட்டில் போய் இருந்துள்ளார். இதனையடுத்து ஊர் பெரியவர்கள் பேசி இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளார்கள்.