வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதையடுத்து அதிமுக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2014, 6:48 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதையடுத்து அதிமுக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் 13 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வேட்பாளர் இ. புவனேஸ்வரி, பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் ஆகியோரின் மனுக்கள் தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வந்தது. இதையடுத்து இன்று பா.ஜ.க. வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். எனவே  அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தேர்தல் அதிகரி லட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.