வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை அருகே மர்ம பார்சலில் ஜெலட்டின், டெட்டனேட்டர் குச்சிகள்

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பிரதான நான்கு வழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சாலையோரமாக பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று கிடந்தது. தகவலறிந்த

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 11:02 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை நான்கு வழிச்சாலை பகுதியில் கிடந்த மர்ம பார்சலில் கல் குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின், டெட்டனேட்டர் குச்சிகள் இருந்தது தெரியவந்தது.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பிரதான நான்கு வழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சாலையோரமாக பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று கிடந்தது. தகவலறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் மாதவன்நாயர் தலைமையில் வெடிகுண்டு பிரிவு ஆய்வாளர் குணசேகரன், மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜூ மற்றும் போலீஸார் விரைந்து சென்று அந்த மர்ம பார்சலை பிரித்து பார்வையிட்டனர்.

இந்த பார்சலில் கல் குவாரியில் பாறையினை உடைக்கப் பயன்படுத்தும் ஜெலட்டின்,டெட்டனேட்டர் குச்சிகளும் இருந்தது. அதிலிருந்த 13 ஜெலட்டின் குச்சி மற்றும் 12 டெட்டனேட்டர் குச்சிகளை போலீஸார் கைப்பற்றி நீதிமன்ற அனுமதியுடன் அழிக்க நடவடிக்கை எடு்த்தனர்.

ஜெலட்டின் குச்சிகள் கல் குவாரியில் பாறையினை உடைக்கப் பயன்படுத்த கொண்டு செல்ல எடுத்து செல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதி செயல்களில் ஈடுபடுவதற்காக எடுத்து செல்லப்பட்டதா என்பது குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.