வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து நெல்லையில் தமமுக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இனப்படுகொலை நடத்திய அதிபர் ராஜபட்சவை ஐக்கிய நாடுகள் சபையில் செப். 25 ஆம் தேதி பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இக்கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி

News image
Updated On :23 செப்டம்பர் 2014, 10:26 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் இலங்கை அதிபரை கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் இனப்படுகொலை நடத்திய அதிபர் ராஜபட்சவை ஐக்கிய நாடுகள் சபையில் செப். 25 ஆம் தேதி பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இக்கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணி மாவீரன் தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள் கிங்தேவேந்திரன், பொட்டல் கண்ணன், எம்.எம். லாரன்ஸ், எஸ். ஆறுமுகம், கே.பி.எஸ். முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் அ. வியனரசு, பத்திரிக்கை உதவி ஆசிரியர் சண்முகசுந்தர், ஏ.கே. நெல்சன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஜி. துரைபாண்டியன், கே. தங்கராஜ், ஜி.வி. பெருமாள்பாண்டியன்,எஸ். சிவக்குமார், ஏ. தங்கராஜ்பாண்டியன், கணேசன், சீதாராமன், அழகர்சாமி, அருள்ராஜ், அன்பழகன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.