சேரன்மகாதேவி அருகே மேலக்கூனியூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிராஜ் மகன் செந்தில்வேல்முருகன் (26). டிரைவராக வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மகன் முருகன் (36). மந்திரகுமார் மகன் விஜய் (19). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.செந்தில்முருகன், முருகன், விஜய் மற்றும் நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை கொண்டாட மேலக்கூனியூரில் ரயில்வே கேட்டுக்கு தென்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அசைவ உணவு தயாரித்து சாப்பிட்டனராம்.பிற்பகல் 3 மணியளவில் சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, கூனியூர் பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் வீட்டில் இருந்த செந்தில்வேல்முருகன், முருகன், விஜய் ஆகியோர் பலத்த காயமடைந்து கருகினர். சம்பவ இடத்திலே செந்தில்வேல்முருகன், முருகன் ஆகியோர் இறந்தனர். விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.