திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் என்பவர் கடந்த 2009ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார் திண்டுக்கலைச் சேர்ந்த கார்த்திகேயன் சதீர் அகமது உமர்முப்தார், சங்கர், முகிலன் மஞ்சு பார்கவி ராஜ்குமார், துரைப்பாண்டி, விவேக், ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். பொங்கியப்பன் இன்று தீர்ப்பு தீர்ப்பு வழங்கினார். இதில் மஞ்சு பார்கவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் கார்த்திகேயன், சதீர் அகமது, உமர்முப்தார், ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்ற 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்பு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.