மேலூர் சீர்திருத்தப் பள்ளியில் கைதிகளிடையே மோதல்: 3 பேர் படுகாயம்
மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் கைதிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிறை வார்டன் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் கைதிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிறை வார்டன் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 85 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் இன்று காலை சமையல் வேலைக்காக ஒதுக்கப்பட்டனர். மற்றவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். வார்டன் சந்தானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீர்திருத்தப்பள்ளியில் தங்கி இருந்தவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அதில் மணி என்ற மணிகண்டன் (20) பிரபு என்ற பிரபுதேவா (21) ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர்.
சண்டையை விலக்கச் சென்ற வார்டன் சந்தானத்திற்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் தொகுதி எம்.எல்.ஏ சாமி சம்பவ இடத்துக்கு சென்றார். மேலூர் டி.எஸ்.பி. மங்கலெஸ்வரன், இன்ஸ்பெட்கர் முத்து மற்றும் போலீஸார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...