மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காங்கிரஸ் கட்சியின் வட்டார நிர்வாகிகள் நியமனம் 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

Updated On :2 ஆகஸ்ட் 2015, 11:32 am

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவின் படியும், முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் சிவகாசி ஒன்றியம் பிரிக்கப்பட்டு கிழக்கு வட்டாரம் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கிழக்கு வட்டார தலைவராக சித்தமநாயக்கன்பட்டி எம்.எம்.சீனிவாசன், மாவட்ட செயலாளராக காட்டுராஜா, வட்டார துணைத் தலைவர்களாக ரெங்கபாளையம் பொன்னுப்பாண்டி, தச்சகுடி பொன்னுச்சாமி, நெடுங்குளம் முருகேசன், வட்டார செயலாளர்களாக அங்கப்பன், ஈஸ்வரன், பாண்டி, இருளப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.