டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேமுதிக  போராட்டத்துக்கு ஆதரவு: கருணாநிதிக்கு விஜயகாந்த் நன்றி

தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:23 am

அரவிந்தன்

தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அகிம்சை வழியில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி தர மறுத்த முதல்வர் ஜெயலலிதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 தேமுதிக தொண்டர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக, சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைந்தகரை அண்ணாநகர் வளைவு பகுதியில் தேமுதிகவினரைக் காவல்துறை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்ற போது, அதிமுகவினர் கும்பலாகச் சேர்ந்து கொண்டு பேருந்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

 அதில் பேருந்தின் கண்ணாடி நொறுங்கியுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாரெனத் தெரிந்தும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேமுதிகவின் அறவழி போராட்டத்தை ஆதரித்து, அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த கருணாநிதி, பொன்.ராதாகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன்,  ஜி.கே.வாசன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றி.

தேமுதிகவின் இதுபோன்ற அறப்போராட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.