மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகள் ரேசன் பொருள்களின் மானியத்தை கடுப்படுத்துவதை கண்டித்து ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :10 ஆகஸ்ட் 2015, 11:31 am

மத்திய, மாநில அரசுகள் ரேசன் பொருள்களின் மானியத்தை கடுப்படுத்துவதை கண்டித்து ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் 2-வது ரயில்வே கேட் அருகே உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். மேலும், நகர்குழு உறுப்பினர்கள் பி.நேரு, எ.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், உணவு பாதுகாப்பு என்ற பேரில் ரேசன் கடைகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து ரேசன் கடைகளிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை தவறாமல் விநியோகம் செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணெய்  வழங்கவும், எடை குறைவில்லாமல் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.