விருதுநகரில் பள்ளிக்குச் சென்ற மாணவி மாயம்

விருதுநகரில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்2 மாணவி மாயமானதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
Updated on
1 min read

விருதுநகரில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்2 மாணவி மாயமானதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

விருதுநகர் இந்திரா நகர் பைபாஸ் சாலை பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகள் மல்லிகா(18). இப்பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை வழக்கல் போல் பள்ளிக்குச் புறப்பட்டுச் சென்றாராம். அதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் தோழி வீடுகளிலும் தேடிப்பார்த்தும் எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லையாம்.

இதைத் தொடர்ந்து மாரியப்பன் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com