டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி: வென்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள்  சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி(2015) யில் வென்றவர்களுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:43 am

ஆா்.மோகன்ராம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள்  சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி(2015) யில் வென்றவர்களுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் ரமா.ராமநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழாண்டுக்கான கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து 316 சிறுகதைகள் வரப்பெற்றன. கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையிலான நடுவர் குழு பின்வரும் கதைகளைத் தேர்வு செய்துள்ளனர்.

புதுகை முத்துமாரி மகன் எழுதிய இருளில் மறையும் நிழல் என்ற சிறுகதை முதல் பரிசையும், திருவாரூர் சிவக்குமார் முத்தையா எழுதிய வள்ளம் போகும் இரவுகள் என்ற சிறுகதை இரண்டாம் பரிசையும், ஈரோடு அன்புக்கரசி ராஜ்குமார் எழுதிய தனிமை சிறுகதை மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளன. செய்யாறு தீ.தா.நாராயணன் எழுதிய தேனாம்பேட்டை சிக்னல், தூத்துக்குடி அபிவிக்னேஷ் எழுதிய என் முதல் காதலும் கடைசிக் காதலும், அண்டனூர் சுரா எழுதிய மட்டுக்குழி ஆகிய கதைகள் ஆறுதல் பரிசுகளையும் பெற்றுள்ளன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெறும் கலை இலக்கிய இரவில் பரிசு,சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.