அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது

விருதுநகர் அருகே சிவகாசியில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :2 ஜூலை 2015, 8:52 am

விருதுநகர் அருகே சிவகாசியில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே துப்பாக்கி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் அசிஸ் மேதா. அவருடைய மகன் அசோக் மேதாவின் பெயரில் துப்பாக்கி உரிம தொழிலை மாற்ற முடிவு செய்தார். கடந்த 19-ம் தேதி அசிஸ் மேதாவின் பெயரில் இருந்த துப்பாக்கி உரிமம் அசோக் மேதாவின் பெயரில் மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.

துப்பாக்கி உரிம அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வெங்கடேசன் துப்பாக்கி உரிம அலுவலரை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.