விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்ற கடைகளுக்கு அபராதம்

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்ற 11 கடைக்காரர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்ற 11 கடைக்காரர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து தலைக்கசவம் விற்பனை நிலையங்களில் விநியோகமும் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது, இதன் தேவை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு கடைகளில் இருப்பு வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக இருசக்கர வாகன ஓட்டுகிறவர்களிடம் இருந்து ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் மைவிழிச்செல்வி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது ஆய்வில் தெரியவந்தது. இதன் பேரில்   ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்ற 11 கடைகள் மீது தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், தலைக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் ரூ.20 ஆயிரம் வரையில் அதிகமாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com