சாத்தூர் அருகே அனுமதியின்றி ஆட்டோவில் கடத்திச் சென்ற பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான 150 கிலோ சல்பர் மருந்தை சனிக்கிழமை இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் மாலை நேரங்களில் ரேசன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்ததாம்.
அதன் அடிப்படையில் சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேனி தலைமையில் அதிகாரிகள் சாத்தூர்-வெம்பக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதன் உள்ளே பட்டாசுகள் தயார் செய்ய பயன்படும் மூலப்பொருளான சல்பர் மருந்து 3 சாக்கு பைகளில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
மேலும், அவர்கள் குறித்து விசாரணை செய்ததில் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்(52), குமார்(32) என்பது தெரியவந்தது.
உடனே சல்பர் மருந்தையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து கனகராஜ் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

