பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்கு
பிஆர்பி கிரானைட் நிறுவனத்தினர் மீது மேலும் ஒருவர், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளதாக அளித்துள்ள


பிஆர்பி கிரானைட் நிறுவனத்தினர் மீது மேலும் ஒருவர், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளதாக அளித்துள்ள புகார் மீது கீழவளவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனர்.
பிஆரபி கிரானைட் நிறுவனத்தினர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அழகாபுரியை சேர்ந்த ஞானேஷ்வரன் ஒரு புகாரை மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார். அதில், தனக்குச் சொந்தமாக மலம்பட்டி கிராமத்திலிருந்த 1.50 ஏக்கர் நிலத்தில் அனுமதி இன்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில், கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...