டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விஜயகாந்துடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:44 am

அரவிந்தன்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-

தமிழர் நலன் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துகளை உருவாக்க கடந்த 2 மாத காலமாக பல அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து வருகிறேன்.  அந்த அடிப்படையில் விஜயகாந்தைச் சந்தித்தேன்.

 வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தைக் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாகக் கூறினார்.

 ஈழத்தமிழர் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கட்சிகளுக்கு இடையேயான இறுக்கங்கள் குறையும்.

முதல் முறை அனைவரையும் சந்தித்து விட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்திப்பேன்.தேர்தல் கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவும் நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கினால் சந்தித்து பேசுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.