அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணிக்கு இலவச பயிற்சி முகாம்

தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள விரும்புகிற இளைஞர்களுக்கு 21 நாள்கள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On :21 ஜூன் 2015, 6:57 am

தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள விரும்புகிற இளைஞர்களுக்கு 21 நாள்கள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: அடுக்குமாடி, வியாபார தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பாதுகாப்பு பணிக்கு முறையான பயிற்சி பெற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு தமிம்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து இலவசமாக பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட தலைநகரங்களில் உள்ள காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 29ம் தொடங்கி, தொடர்ந்து 21 நாள்கள் வரையில் பயிற்சி நடத்தப்பட இருக்கிறது. இப்பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 பேருக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றராகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 18 வயது முதல் 45 வயதிற்குள்ளும் இருப்பது அவசியம் ஆகும்.

இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும். மேலும், இடைவேளை நேரத்தில் தேனீரும், மதிய உணவும் விலையில்லாமல் வழங்கப்படும். இதில், பயிற்சியின் இறுதியில் பாதுகாப்பு பணிக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இதில், சேர ஆர்வமுள்ளோர் தங்களது கல்விச் சான்று, ஜாதி, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 22,23 ஆகிய நாள்களில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. எனவே தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு பிரிவு ஒன்றும் 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து நிறைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.